Friday, June 17, 2011

Once Upon a Time in Chennai

I was spending some time today evening, cleaning out and disposing old papers and came across this, yellowed, withered, dog-eared paper with some Tamil writing on it.  I wrote this in '85 when I was working in CMC at Chennai.  I love Sujatha's Tamil novels and his style of new age writing.  I took a day out of my typical work life in CMC, did "ஈ அடிச்சான் காபி" of Sujatha's writing style and wrote this.

Enjoy!!!

திங்கள் கிழமை எப்பொழுதும் போல் விடிந்தது.
சூரியன் எப்பொழுதும் போல் எழுந்தான். வேலைக்குச் செல்பவர்கள்
எப்பொழுதும் போல் எலெக்ட்ரிக் ட்ரெயினை பிடிக்க ஓடிக்கொண்டிருந்தார்கள்.

நான் தி. நகர் பஸ் நிலையத்திற்குச் சென்றேன். நீங்கள் தி.ந.ப. நிலையத்தை
பார்த்ததுண்டா? பார்த்திருக்கிறவர்கள் அடுத்த பாராவுக்கு செல்லவும்.
பார்க்காதவர்கள் கேட்கவும். இந்த ப. நிலையம் ஒரு காலத்தில் மிகவும்
சிறியதாக இருந்தது. இப்போதோ, வெவ்வேறு வழிகளில் பாரிமுனை 
செல்லும் 9, 10, 11, 11ஏ, திருவல்லிக்கேணி செல்லும் 12, 13, அண்ணா சதுக்கம் செல்லும்  13பி, பட்டினப்பாக்கம் செல்லும் 12ஏ,  கே.கே நகர் செல்லும் 12 ஜி எல்லாம் நின்று கொண்டிருந்தன.

முகப்பில் நின்று முதலில் வெளியே வந்த 11-இல் தொற்றிக்கொண்டேன். வழக்கமாக, அதே நேரத்தில், அதே பஸ்-இல், தோளில் வெள்ளை கோட்டுடன் வரும் மெடிக்கல் படிக்கும் பெண் என்னைப்பார்த்து சிரிப்பது (அல்லது புன்னகைப்பது) போல் இருந்தது! எதற்காக?  என் முகத்தில் ஏதேனும் பவுடர் திட்டோ?

பஸ் பனகல் பார்க்-ஐ கடந்து, ஜி. என். செட்டி ரோட்டில் விரைந்து,
அண்ணா சாலையை  83 டிகிரியில் வெட்டி, அண்ணா

                                               க  ஊ  ர்  ந்  து
                                      வா                             கீ
                                து                                          ழே
மேம்பாலத்தில் மெ                                                       இறங்கியதும்
என்னை  விடுவித்துகொண்டேன்.

ஆபீஸ்-இல் நுழைந்ததும் ஐ. டி. எம். -இல் பிரிண்டர் ரிப்பேர் என்றார் 
தேவராஜ். டூல் கிட்-ஐ  < ச்சே! என்ன கனம் >  எடுத்துக்கொண்டு லிப்ட்-இல் நுழைந்து, கீழே வந்து, ஆட்டோ பிடித்து ஐ. டி. எம்.சென்றேன்.

உள்ளே நுழைந்து, "குட் மார்னிங் ஹென்றி" என்றேன். ஹென்றி பதில் சொல்ல வில்லை. ஹென்றி, அந்த கம்ப்யூட்டர்-க்கு நான் வைத்த பெயர்.  இதனை இணைப்பதற்கு எத்தனை  மூளைகள் எத்தனை படித்து, எத்தனை கண் விழித்து, எத்தனை பாஸ் செய்து, எத்தனை இணைத்திருக்கவேண்டும்.

சி.பி.யு. கன்சோல்-இல் ஒரு ப்ரோக்ராம் என்டர் செய்து, பிரிண்டர் அருகே  சென்று, ஸ்டார்ட்  பட்டன்-ஐத் தட்டினேன்.

                                     டட்டர  டட்டர   டட்டர  டட் 

என்று ஒரு லைன் அடித்து விட்டு, "பிரிண்ட் செக்"  என்று சிவப்பு நிறத்தில் எச்சரித்தது. 36 ஆவது பொசிஷன் என்னை பார்த்து சிரித்தது.

ஹேமரும், காயிலும் ஒழுங்காக உள்ளனவா என்று டெஸ்ட் செய்து விட்டு, 36 ஆவது காயிலைபிரித்தெடுத்து, புதிய காயிலை இணைத்து, இன்சுலேஷன்  டேப் சுற்றி, மீண்டும் டெஸ்ட் செய்து, ஒ.கே. யூ கேன் டேக் தி சிஸ்டம் என்று ஆபரேடரிடம் சொல்லிவிட்டு, ஆட்டோ பிடுத்து ஆபீஸ் வந்தேன்.

14 comments:

  1. thats it or will it be continued :)

    ReplyDelete
  2. Nice one 'SHRETHA' (Sheila + Shreya + Swetha), I mean Sundu, just found a new nick name for you like 'Sujatha'....:):):) Keep writing!

    ReplyDelete
  3. There is more! Do you want me to continue or are glad it is over? :)

    ReplyDelete
  4. Hey Priya, nice "pen name"! I like it. I think "Sujatha" is also the writer's wife's name. Have you read his books?

    ReplyDelete
  5. haha only if the story is complete I can say its good or bad :)
    btb good work with alignment of words would have needed lots of patience !

    ReplyDelete
  6. i guess the house is going to be rid of all clutter and OLD papers finally!!! :)

    ReplyDelete
  7. @Sri
    There is no story! Just an attempt to write like Sujatha :)

    BTW, Sujatha & Abdula Kalaam are class mates and the 3 of us studied in MIT :))

    ReplyDelete
  8. @Sundu,
    Yeah, its Pen name (sorry for the typo), read some articles...

    BTW, 'Sujatha' is from the great 'SRIRANGAM' & me too!.....:):)

    ReplyDelete
  9. O'Priya - are u one of "Sri rangathu Devathai"....btw, don't fly-high just bcos i called u devathai.....it reminded me of Sujatha's short stories in same name whereby he vividly portraits typical iyengar aathu agraharam and day-to-day habitats, so vividly intermixed with street cricket and i just loved all the stories..

    ReplyDelete
  10. beautiful sundu! Love sujatha's writings: miss him too; this short one is just typical of him!

    ReplyDelete
  11. ஜலீல் பிப்ரானின் விமர்சனம் :
    அரைகுறை கட்டுரை/கதை/எதோ ஒண்ணுல தலைப்பு இல்லே!
    தலைப்பு ரொம்ப முக்கியம்... கவர்ச்சியா வைத்தா மேட்டர் இல்லாட்டியும் படிப்பாங்க..!
    So ' முந்தானை' ன்னு தலைப்பு கொடுத்தா எப்படிடா இவன் கம்ப்யுட்டருக்கும் முந்தானைக்கும்
    முடிச்சு போடுவான்னு ஆர்வத்தோடு படிப்பாங்க..!
    ஈ ஐ நல்லா அடிச்சதனாலே காபி டபுள் ஸ்ட்ராங்கா ஆயிடுச்சு..!
    முயற்சி பண்ணுனா காபிரைட்டர் ங்கிற பேரிலிருந்து ஒரிஜினல் ஸ்டைலுக்கு மாறலாம்!
    வாழ்த்துக்கள்!
    எழுத்தாளர் சுந்து வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  12. @Sheila:
    Old is GOLD. All the old papers are staying :)

    @Priya
    Sujatha visited MIT when I was studying and had lunch with us. He talked to us about his hostel days @MIT. His "Hostel Dhinangal" story happens @MIT and some of the characters were real and were living in the campus at the time !!! :)

    @Siva
    Every visit home, I pick up few Sujatha books and building up my collection.

    @JP
    Thanks for the constructive criticism/விமர்சனம் :) I will make sure all my posts (and stories) have the word முந்தானை in the title :) :) :)

    ReplyDelete
  13. Good attempt. If you have munthanai as title for all the posts, then you will inhrrit tbat as your prefix. We may call u as "Munthanai"Sundu.:)

    ReplyDelete
  14. @Sathi
    Ha ha...that could be my other 'pen name' :)

    ReplyDelete